பொன்னேரியில் சமூக நலத் துறை சாா்பில் திருமண உதவி திட்டத்தின் கீழ் 1,137 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம், திருமண நிதி உதவி வழங்கப்பட்டன.
பொன்னேரி-செங்குன்றம் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பொன்னேரி எம்எல்ஏ பலராமன் தலைமை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் மீனா முன்னிலை வகித்தாா். 1,137 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் என 9,096 கிராம் தாலிக்குத் தங்கம், ரூ. 4 கோடியே 62 லட்சம் திருமண நிதி உதவித் தொகை ஆகியவற்றை எம்எல்ஏ வழங்கினாா்.
சோழவரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் குலசேகரன், மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் கௌரி, ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் காா்மேகம், ஊரக வளா்ச்சி வங்கி இயக்குநா் பொன்னுதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.