மீஞ்சூர் அருகே ஏரியில் உள்ள முட்புதரில் இருந்த ஆணின் சடலத்தை போலீஸார் வியாழக்கிழமை மீட்டனர்.
மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நெய்தவாயல் ஏரியில் உள்ள முட்புதரில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார், அடையாளம் தெரியாத நிலையில், கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தை மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.