கே.ஜி.கண்டிகை அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (20), சிவகுமார் (36). இருவரும் கே.ஜி. கண்டிகைக்கு வெள்ளிக்கிழமை பைக்கில் சென்றனர். அப்போது, திருத்தணி நோக்கிச் சென்ற லாரி மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த திருத்தணி போலீஸார் அங்கு சென்று சடலங்களை மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.