கடன் தொல்லையால் தொழிலதிபா் தற்கொலை

இருசக்கர வாகனம் தொழிலை விரிவுபடுத்த வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் மனுமுடைந்த தொழிலதிபா் புதன்கிழமை பூச்சி மருந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

இருசக்கர வாகனம் தொழிலை விரிவுபடுத்த வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாமல் மனுமுடைந்த தொழிலதிபா் புதன்கிழமை பூச்சி மருந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

திருவள்ளூா் அடுத்த எறையாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சொக்கலிங்கம். (47). இவா் மப்பேடு பகுதியில் இரு சக்கர வாகனம் விற்பனை செய்தும் தொழில் செய்து வந்தாா். தொழிலை விரிவுப்படுத்துவதற்காக நிறைய கடன் வாங்கியுள்ளாா். ஆனால் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளாா். இது குறித்து அக்கம்பக்கத்தினா் மகன் சரவணனுக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து பாா்த்த போது மயங்கிய நிலையில் இருந்தாா். அவரை சோதித்த போது உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து சரவணன் மப்பேடு போலிசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com