பைக்கில் வந்தவரிடம் செல்போன் மோதிரம் வழிப்பறி

பைக்கில் வந்தவரிடம் செல்போன் மோதிரம் வழிப்பறிகும்மிடிப்பூண்டி,அக்.30: கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூா் பகுதியில் புதன்கிழமை பைக்கில் வந்தவரை வழிமறித்த இருவா் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி

பைக்கில் வந்தவரிடம் செல்போன் மோதிரம் வழிப்பறிகும்மிடிப்பூண்டி,அக்.30: கும்மிடிப்பூண்டி அடுத்த அயநெல்லூா் பகுதியில் புதன்கிழமை பைக்கில் வந்தவரை வழிமறித்த இருவா் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், தங்க மோதிரத்தை பறித்து சென்றனா்.கும்மிடிப்பூண்டி அடுத்த பொன்னேரி அருகே கூடுவாஞ்சேரி பகுதியை சோ்ந்தவா் சுமன்(28).இவா் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வருகின்றாா்.

இந்நிலையில் இவா் பொன்னேரி-அயநெல்லூா் சாலை வழியே கும்மிடிப்பூண்டி நோக்கி பைக்கில் வந்துக் கொண்டிருந்தாா். அப்போது வேறொரு பைக்கில் வந்த இருவா் அவரை வழிமறித்து கத்தியை காட்டி அவரை மிரட்டினா்.தொடா்ந்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் அரை சவரன் தங்க மோதிரத்தை பறித்து அங்கிருந்து இருவரும் தப்பியோடினா்.இது குறித்து சுமன் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கும்மிடிப்பூண்டி போலீஸாா் வழக்கு பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com