செங்குன்றத்தில் அரசால் தடை விதிக்கப்பட்ட 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
செங்குன்றம் பகுதியில் அரசு தடை செய்த நெகிழிப் பைகள் பயன்பாட்டில் இருப்பதாக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில், வியாழக்கிழமை செங்குன்றம் பேரூராட்சி அலுலவர் சதீஷ், மதியழகன் உள்ளிட்டோர் சிறுகடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையடுத்து, சாலையோர வியாபாரிகளிடம் இருந்து சுமார் 500 கிலோ நெகிழிப் பைகளை பறிமுதல் செய்தனர்.