திருத்தணி பகுதியில் பலத்த மழை காரணமாக நந்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருத்தணி பகுதியில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில் பலத்த மழை பெய்தது.
இதில், திருத்தணியில் 17 செ.மீ. அளவுக்கு மழை கொட்டியதால், நந்தியாற்றில் வெள்ளம் ஓடியது.
இதுதவிர அரசு பள்ளிகள் மற்றும் தாழ்வான நகர பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.