கும்மிடிப்பூண்டி அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த பெண்ணிடம் 10 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டியை சாய்பாபா நகரைச் சேர்ந்த தர்மலிங்கத்தின் மனைவி சாந்தி (50). இவர் தனது குடும்பத்தினருடன் கும்மிடிப்பூண்டி அருகே அரசூரில் நடைபெற்ற திருவாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்குச் சென்றிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர்கள், சாந்தியின் கழுத்தில் இருந்த 10 சவரன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து
வருகின்றனர்.