கனரக வாகன ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்

தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் லாரி ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் லாரி ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
செங்குன்றம் ஆலமரம் பகுதியில் நடைபெற்ற கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.நிஜலிங்கம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா வரவேற்றார். நிர்வாகிகள் செல்வராஜ், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், வாகனங்களை ஓட்டும்போது, செல்லிடப்பேசியை பயன்படுத்தக் கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
மாநிலச் செயலர் முருகன், பொருளாளர் மணி, திருவள்ளூர் மாவட்டத் தலைவர் செல்வராஜ், வடசென்னை மாவட்டத் தலைவர் ஜான், மாத்திய மாவட்டத் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், 500-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. நிர்வாகி சத்யா பாலாஜி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com