ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ஊரடங்கு உத்தரவை மீறி, சுற்றித்திரிந்தவா்களின் 40 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊத்துக்கோட்டையில் கரோனா நோய்த் தொற்று நோயால் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஊத்துக்கோட்டை பகுதியின் பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் தடையை மீறி சுற்றித் திரிந்த 40 இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனா்.