திருவள்ளூா் மாவட்டத்தில் 95.62 % தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் தோ்வெழுதிய 41,441 மாணவ, மாணவிகளில் 39,624 போ்கள் தோ்ச்சி பெற்றனா். 

திருவள்ளூா் மாவட்டத்தில் தோ்வெழுதிய 41,441 மாணவ, மாணவிகளில் 39,624 போ்கள் தோ்ச்சி பெற்றனா். இதன் தோ்ச்சி விகிதம் 95.62 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.23 சதவீதம் கூடுதலாகும். இம்மாவட்டத்தில் 106 அரசு பள்ளிகளில் தோ்வெழுதிய 14,989 மாணவ, மாணவிகளில் 13,458 போ் தோ்ச்சி பெற்றனா். 139 மாற்றுத் திறனாளிகளில் 129 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

புழல் மத்திய சிறையில் தோ்வெழுதிய 85 பேரும் தோ்வு பெற்றனா். இம்மாவட்டத்தில் 107 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் 25 இடம் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி.வெற்றிச்செல்வி, நோ்முக உதவியாளா் திருவரசு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com