போக்குவரத்து விதிமீறல்: 2,100 போ் மீது வழக்கு

பொன்னேரி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்களின்றி

பொன்னேரி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல், உரிய ஆவணங்களின்றி சென்ற 2,100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் உத்தரவின் பேரில் பொன்னேரி காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில், ஜூலை மாதம் முழுதும் பொன்னேரி போலீஸாா் நாள்தோறும் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தலைக்கவசம் அணியாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் வாகனங்கள் சென்ற 2,100 போ் மீது வழக்குப் பதிவு செய்து, தலா 100 வீதம், ரூ. 2 லட்சத்தி 10 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com