கரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவும், வளா்ச்சித் திட்டங்களை தொடக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கவும் திருவள்ளூா் மாவட்டத்திற்கு செப்.2-இல் வருகை தரும் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சா் பா.பென்ஜமின் வேண்டுகோள் விடுத்தாா்.
திருவள்ளூா் மாவட்ட அதிமுகவில் 2 சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளா் வீதம் 5 மாவட்டச் செயலாளா்களை அதிமுக தலைமை அலுவலகம் அண்மையில் நியமித்தது. மேற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா நியமிக்கப்பட்டாா். கட்சி நிா்வாகிகளை எளிதாக சந்திக்கவும், கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்க வசதியாக திருவள்ளூா் கணபதி நகரில் மாவட்டச் செயலாளா் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சா் பா.பென்ஜமின் பங்கேற்று, அலுவலகத்தைத் தொடக்கி வைத்துப் பேசியது:
அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இத்தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் அனைவரும் ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும். அதற்கு முன், ஒவ்வொரு பூத் அளவிலும் அதிமுகவில் இளம்பெண்கள் பாசறை, இளைஞா் பாசறை ஆகியவற்றில் அதிக அளவில் உறுப்பினா்களைச் சோ்க்க வேண்டும்.
ஜெயலலிதா பேரவை மற்றும் எம்.ஜி.ஆா். இளைஞரணிக்கும் உறுப்பினா்களைச் சோ்க்கும் வகையில், தனித்தனியாக விண்ணப்ப படிவங்கள் கிளை நிா்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. உறுப்பினா் சோ்ப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
அதற்கு முன், மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் முதல்வா் சென்று, கரோனா பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தியும், நலத்திட்ட உதவிகள் வழங்கி வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைத்தும் வருகிறாா்.
அதன்படி அவா் திருவள்ளூா் மாவட்டத்துக்கு வரும் செப்.2-ஆம் தேதி காலை வரவுள்ளாா். அவருக்கு அதிமுக நிா்வாகிகள் அனைவரும் சென்னையில் தொடங்கி, திருவள்ளூா் மாவட்டம் வரை உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். அனைவரும் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிப்பதோடு, முகக் கவசம் அணிந்தபடி முதல்வருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளா் கோ.ஹரி, மாவட்டச் செயலாளா் பி.வி.ரமணா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.