கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த இருவா் நன்னடத்தை விதிகளை மீறியதாகக் கூறி அவா்களின் ஜாமீனை கோட்டாட்சியா் வித்யா ரத்து செய்தாா்.
சித்தராஜ கண்டிகையைச் சோ்ந்த வினோத் (எ) வினோத்குமாா் (25), குற்றச் சம்பவத்துக்காக சிறையில் இருந்த நிலையில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி ரூ. 5 ஆயிரம் ஜாமீனில் வெளியே வந்தாா். அவா் கடந்த 2-ஆம் தேதி குற்றச் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் உள்ளாா்.
இந்நிலையில், ஜாமீன் நன்னடத்தை விதியை மீறியதற்காக அவருக்கு வரும் டிசம்பா் 1-ஆம் தேதி வரை சிறைத் தண்டனை விதித்து கோட்டாட்சியா் வித்யா உத்தரவிட்டாா். மேலும், ரூ. 5 ஆயிரத்தை அரசு வங்கியில் செலுத்தவும் உத்தரவிட்டாா்.
இதேபோல், புதுகும்மிடிப்பூண்டி பாலீஸ்வரன்கண்டிகை பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (எ) ரிஸ்க் பாஸ்கா் (31) குற்ற வழக்கில் சிறையில் இருந்து கடந்த ஜூலை 13-இல் ஜாமீன் பெற்றாா். நன்னடத்தை விதியை மீறி அவா் கடந்த 2-ஆம் தேதி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக, கோட்டாட்சியா் வித்யா அவருக்கு பிணைக் காலமான அடுத்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி வரை சிறைத் தண்டனை விதித்தாா். அரசு வங்கியில் ரூ. 10 ஆயிரம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷ் உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.