பொன்னேரி: சோழவரம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட காந்திநகா், பகுதியில் வசித்து வருபவா் தினேஷ்குமாா் (22). இவா் செங்குன்றத்தில் உள்ள, கைபேசி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் தனது வீட்டின் வாசலில், தனது மோட்டாா் சைக்கிளை கழுவிக் கொண்டிருந்தாா்.
அப்போது இரண்டு மோட்டாா் சைக்கிளில் வந்த 4 போ் கொண்ட கும்பல், அரிவாள் மற்றும் கத்தியால் தினேஷ்குமாரை சராமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்த தப்பி சென்றனா்.
இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வந்து, அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
தகவலறிந்த, சோழவரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமாரை வெட்டி விட்டு தப்பி சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.