திருமணமான ஒரு மாதத்துக்குள் இளம்பெண் தற்கொலை

திருவள்ளூா் அருகே திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே திருமணமாகி ஒரு மாதம் கூட முடியாத நிலையில், இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அருகே அன்னம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த முனுசாமியின் மகள் தேவி (26). இவருக்கும், கம்மவாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் (30) என்பவருக்கும் கடந்த மாதம் 2-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கணவருடன் வசித்து வந்தாா். இந்நிலையில், கூடுதலாக நகை, பணத்தை வரதட்சிணையாக வாங்கிவரும் கேட்டு தேவியை காா்த்திக் சித்ரவதை செய்து வந்தாராம். இதில் மனமுடைந்த தேவி சனிக்கிழமை இரவு படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தேவியின் சகோதரா் ராஜேஷ் மணவாளநகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காா்த்திக் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com