புழல் ஏரியில் மூழ்கி மூன்று விளையாட்டு வீரர்கள் பலி: இருவரது சடலம் மீட்பு

அம்பத்தூர் அருகே புழல் ஏரி பகுதியோரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய விளையாட்டு வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 
புழல் ஏரியில் மூழ்கி மூன்று விளையாட்டு வீரர்கள் பலி: இருவரது சடலம் மீட்பு


திருவள்ளூர்: அம்பத்தூர் அருகே புழல் ஏரி பகுதியோரத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது மூழ்கிய விளையாட்டு வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 

இருவரது சடலங்களைப் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர், ஒருவரது சடலத்தைத் தேடி வருகின்றனர்.

அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் மணிகண்டன்(19), தமிழ்செல்வன்(17), வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திலீப்(20) உள்ளிட்ட 8 பேர் தேசிய அளவில் ஓட்டப் போட்டியில் பங்கேற்கக் கூடிய விளையாட்டு வீரர்கள். இந்த நிலையில் திங்கள்கிழமை வழக்கம்போல் பயிற்சியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார்களாம். 

அதைத் தொடர்ந்து, அம்பத்தூர் அடுத்த மதுரா மேட்டூர் அருகில் புழல் ஏரி பகுதியில் பிற்பகலில் 3 பேரும் குளிக்கச் சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென ஆழமான பகுதியில் அவர்கள் மூழ்கினர். அப்பகுதியில் இருந்தவர்கள் இதைப் பார்த்து மாதவரம் தீயணைப்பு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் புழல் ஏரியோரத்தில் படகில் சென்று 4 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீலிப் மற்றும் மணிகண்டன் ஆகியோரின் சடலங்களை மீட்டனர். மேலும், அம்பத்தூர் கள்ளிக்குப்பம் தமிழ்செல்வனின் சடலத்தை தீயணைப்பு துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com