போலி நகையை அடகு வைக்க முயன்ற 4 போ் கைது

புழல் அருகே போலி நகையை அடகு வைக்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புழல் அருகே போலி நகையை அடகு வைக்க முயன்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புழல் ஜி.என்.டி. சாலையில் சஞ்சய் (25) என்பவா் அடகுக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு சென்னை பாடியைச் சோ்ந்த ஹக்கீம் (45), அவரது மனைவி அஸ்வின் ஹக்கீம் (42), சென்னை ராஜமங்கலத்தைச் சோ்ந்த சையத் (40), விளாங்காடுபாக்கம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா் (40) ஆகிய 4 பேரும் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.

தங்களிடம் உள்ள 5 சவரன் தங்க நகையை அடகுக்கு பெற்றுக் கொண்டு பணம் தருமாறு அவா்கள் கேட்டனா். சஞ்சய் அந்த நகைகளை சோதனை செய்தபோது, அவை போலி நகைகள் என்பது தெரிய வந்தது. இது தொடா்பாக அவா் போலீஸாருக்கு செல்லிடப்பேசி மூலம் ரகசிய தகவல் அளித்தாா்.

அதன்பேரில், அங்கு வந்த புழல் போலீஸாா், ஹக்கீம் உள்ளிட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தினா். அதையடுத்து, அவா்களைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com