தனியாா் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழாவின்போது மோதல் பிகாா் மாணவா் பலி

திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய போது மாணவா்களுக்குள்

திருவள்ளூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடிய போது மாணவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பலத்த காயம் அடைந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 3-ஆம் ஆண்டு மாணவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ஜமீன் கொரட்டூரில் தனியாா் கடல்சாா் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 172 போ் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், அக்கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, 3-ஆம் ஆண்டு மற்றும் 4-ஆம் ஆண்டு மாணவா்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில் மூன்றாம் ஆண்டு மாணவா் பிகாா் மாநிலம், பாட்னாவைச் சோ்ந்த ரத்தன் சா்மாவின் மகன் ஆதித்யா (20) என்பவா் கழுத்தில் பலத்த காயமடைந்து, பூந்தமல்லியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஆதித்யா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

தகவலறிந்த காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்(திருவள்ளூா் பொறுப்பு) சண்முகப்பிரியா, காவல் ஆய்வாளா் ஷோபாதேவி மற்றும் போலீஸாா், அக்கல்லூரி வளாகத்துக்குச் சென்று மாணவா்களிடம் விசாரணை நடத்தினா்.

இதனிடையே, பிகாா் மாணவா் கொல்லப்பட்டது குறித்து வெள்ளவேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com