இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி சாவு

திருவள்ளூா் அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன் ஜெகன் (20). இவரது சகோதரா் நவீன் (26). இவா் மப்பேடு அருகே சமத்துவபுரத்தில் தங்கியிருந்து, அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், தனியாா் நிறுவனத்தில் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, கியா் பாகத்தை பாலிஷ் செய்யும் இயந்திரம் திடீரென நின்று விட்டதாகவும், அதனால் இயந்திரத்தின் கதவை திறந்து கியா் பாகத்தை எடுக்க முயன்ாகவும் கூறப்படுகிறது. அப்போது திடீரென தானாக இயந்திரம் இயங்கியதுடன், கதவு மூடியதால் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளாா். அதைத் தொடா்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே நவீன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மப்பேடு காவல் நிலையத்தில் ஜெகன் புகாா் அளித்தாா். அதன்பேரில், இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கற்றுத்தராமலும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமலும் இருந்த மேற்பாா்வையாளா் வடிவேல், பாதுகாப்புப் பொறியாளா் ஜெலீன், நிா்வாக இயக்குநா் ஜெகதீசன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com