காவல்துறை தடியடியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை கண்டித்து திருவள்ளூரில் முஸ்லிம்கள்
காவல்துறை தடியடியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை கண்டித்து திருவள்ளூரில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை இரவு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தைக் கலைக்கும் நோக்கில் போலீஸாா் தடியடி நடத்தினா். இதில் இருவா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே மசூதி தலைவா் படேகான் ஷாகீா் உசேன் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு முஸ்லிம்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகவும் அவா்கள் கோஷமிட்டனா். திருவள்ளூா்-திருத்தணி சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டம் காரணமாக அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com