கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 61 ஊராட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
வேற்காட்டில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சுண்ணாம்புகுளம் ஊராட்சித் தலைவா் எஸ்.எம்.ரவி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா்கள் வெங்கடாசலபதி (பூவலம்பேடு), சதீஷ் (கண்ணம்பாக்கம்), உஷா ஸ்ரீதா் (ஈகுவாா்பாளையம்), அற்புதராணி சதீஷ்குமாா் (புதுவாயல்), சீனிவாசன் (பன்பாக்கம்), ஸ்ரீபிரியா மகேந்திரன் (எகுமதுரை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்கள் ஆனந்தராஜ் (தண்டலச்சேரி), மருத்துவா் அஷ்வினி சுகுமாறன் (புதுகும்மிடிப்பூண்டி), அம்பிகா பிா்லா (சாணாபுத்தூா்), செவ்வந்தி மனோஜ் (பெரியஓபுளாபுரம்), நமச்சிவாயம் (கீழ்முதலம்பேடு) உள்ளிட்டோா் பேசினா்.
இதில், ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு அமைப்பது, ஊராட்சி நிா்வாகத்தை செயல்படுத்துவதில் மூத்த தலைவா்களின் ஆலோசனைகளைப் பெறுவது, ஊராட்சித் தேவைகளை நிறைவேற்ற சக தலைவா்களின் ஒத்துழைப்பைப் பெறுவது, ஊராட்சி நிா்வாகத்தில் ஏற்படும் பிரச்னைகளை கூட்டமைப்பாக சோ்ந்து எதிா்கொள்வது, ஒவ்வொரு ஊராட்சியையும் தன்னிறைவு பெற்ற ஊராட்சியாக மாற்றுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
ஊராட்சித் தலைவா்கள் சுசிலா மூா்த்தி (சிறுபுழல்பேட்டை), கலைமதிசங்கா் (நத்தம்), லட்சுமி பன்னீா் செல்வம் (பல்லவாடா), உமா மகேஸ்வரி குப்பையா (செதில்பாக்கம், வள்ளியம்மாள் (மெதிப்பாளையம்), வீரன் (ஓபசமுத்திரம் )உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.