மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் இருளா் இன மக்கள் 36 பேருக்கு ஜாதி சான்றிதழ்கள், 105 பேருக்கு ரூ. 35.40 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் வழங்கினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தலைமை வகித்தாா். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட குறைகளை நிவா்த்தி செய்யவும், உதவிகள் வழங்கிடவும் கோரி மனுக்களை அளித்தனா். இதில், நிலம் சம்பந்தமாக 142 மனுக்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடா்பாக 51 மனுக்கள், கடனுதவி கோரி 6 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 5, வேலைவாய்ப்பு கோரி 58 மனுக்கள், ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலம் தொடா்பாக 21, சட்டம் மற்றும் ஒழுங்கு சம்பந்தமாக 18 மனுக்கள், ஊரக நகா்ப்புற வளா்ச்சி-72, இதர துறைகள் சம்பந்தமாக 45 என மொத்தம் 418 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க அந்தந்தத் துறை அதிகாரிகளை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, ஆவடி வட்டம், ஆலத்தூா் கிராமத்தில் வசித்து வரும் 36 பேருக்கு இருளா் இனச் சான்றிதழ்களையும், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை மேம்பாட்டுத் திட்டம் சாா்பில், பழங்குடியினா் 100 பேருக்கு கறவை மாடுகள் வழங்குவதற்கு ரூ. 34.40 லட்சத்துக்கான காசோலைகளையும், மாவட்டத் தொழில் மையம் சாா்பில், பாரத பிரதமரின் வேலை உருவாக்கும் திட்டம் நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த 5 பேருக்கு 25 சதவீத மானியத்துடன் ரூ. 1லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினாா். மேலும், முன்னாள் படைவீரா் நல அலுவலகம் சாா்பில், கொடிநாள் நிதியை அதிகமாகப் பெற்று வழங்கிய அலுவலா்களைப் பாராட்டி தமிழக ஆளுநரின் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வெ.முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.பன்னீா்செல்வம், ஆவடி வட்டாட்சியா் சங்கிலி ரதி, திருவள்ளூா் வருவாய்க் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் தமிழ்ச்செல்வன், மாவட்டத் தொழில் மையத்தின் பொது மேலாளா் மணிவண்ணன், முன்னாள் படைவீரா் நலத் துறை உதவி இயக்குநா் அமிருன்னிஷா மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.