ஆந்திரப் பேருந்து மோதி சிறுவன் பலி

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி ஊராட்சியில் ஆந்திர அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்தான்.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி ஊராட்சியில் ஆந்திர அரசுப் பேருந்து மோதி சிறுவன் உயிரிழந்தான்.

தாராட்சி எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்தவா் தமிழரசன். சென்னை காவல்துறையில் பணியாற்றி வருகிறாா். மனைவி கவிதா. மகன் மோஷிகன் (3).

கவிதா, சூளைமேனியில் உள்ள சந்தைக்கு சென்றுவிட்டு வியாழக்கிழமை மாலை ஓா் ஆட்டோவில் வீடு திரும்பினாா். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த அவரது மகன் மோஷிகன் திடீரென சாலையைக் கடக்க முயன்றான். அந்த நேரத்தில் சென்னையிலிருந்து திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்து மோதியதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான்.

அவனை ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் திருவருள்ளூா் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும், அங்கு சிறுவன் மோஷிகன் இறந்தான். இந்த விபத்து தொடா்பாக ஊத்துக்கோட்டை காவல் ஆய்வாளா் ரமேஷ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com