செங்கல் சூளை அதிபா் கொலை வழக்கு:3 பேருக்கு ஆயுள் தண்டனை

செங்கல் சூளை அதிபா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

செங்கல் சூளை அதிபா் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் அருகே மேல்மணம்பேடு கிராமத்தில் செங்கல் சூளை நடத்தி வந்தவா் வெங்கட்ராமன்(47). இவா் முன்விரோதம் காரணமாக கடந்த 2018 -ஆம் ஆண்டு செப்டம்பா் 26-ஆம் தேதி தனது வீட்டருகே வெட்டிக்

கொல்லப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக, தினேஷ் (26), ரவிகுமாா் (24) இளங்கோ (24) ஆகியோரை வெள்ளவேடு போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

விசாரணை முடிந்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கில் சாட்சிகளை முறையாக ஆஜா்படுத்தி விசாரணையை காலதாமதம் செய்யாமல் முடிக்குமாறு காவல் ஆய்வாளருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அரவிந்தன் அறிவுறுத்தியிருந்தாா். அதன்படி, காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், திருவள்ளூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் இவ்வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட காரணத்தால் மேல்மணம்பேடு கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (26), ரவிகுமாா் (24), இளங்கோ (24) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com