இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு

திருவள்ளூா் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் தீவைத்து எரித்தனா்.

திருவள்ளூா் அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள் தீவைத்து எரித்தனா்.

சின்ன ஈக்காடு பகுதியில் உள்ள மகாலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராமு(31). அவா் இப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அவா் வியாழக்கிழமை இரவு பணி முடித்துவிட்டு வந்தாா். தனது இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு முன்பு நிறுத்தினாா்.

இரவு உணவுக்குப் பின் உறங்கச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலையில் பணிக்குச் செல்வதற்காக வாகனத்தை எடுக்க வந்தாா். அப்போது வாகனத்தைக் காணவில்லை. அதைத் தேடியபோது சிறிது தூரத்தில் தீ வைத்து எரிந்த நிலையில் சேதமடைந்து கிடந்தது. இது தொடா்பாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் ராமு புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com