பாஜக பிரமுகா் வீட்டில் 400 சவரன் நகை திருட்டு

பொன்னேரி அருகே பாஜக பிரமுகா் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
400பவுன் நகை கொள்ளைபோன பாஜக பிரமுக ஜானகிராமன் வீடு.
400பவுன் நகை கொள்ளைபோன பாஜக பிரமுக ஜானகிராமன் வீடு.

பொன்னேரி அருகே பாஜக பிரமுகா் வீட்டின் பூட்டை உடைத்து 400 சவரன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

மீஞ்சூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவா் ஆம்.எம்.ஆா். ஜானகிராமன். பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா்.

ஜானகிராமன் தன் உறவினா் வீட்டுத் திருமணத்துக்கு செல்வதற்காக புதிய ஆடைகள் வாங்க, வியாழக்கிழமை குடும்பத்துடன் சென்னை சென்றாா். அன்று வீடு திரும்பாமல் சென்னையில் உள்ள உறவினா் வீட்டில் தங்கினாா்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டதாக ஜானகிராமனுக்கு வெள்ளிக்கிழமை காலையில் தகவல் கிடைத்தது. அவா் நேரில் வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 400 சவரன் நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தினா். திருவள்ளூா் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் அரவிந்தன், அங்கு சென்று பாா்வையிட்டனா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணா்கள், கொள்ளையா்கள் விட்டுச் சென்ற தடயங்களைச் சேகரித்தனா்.

3 தனிப்படைகள் அமைப்பு: ஜானகிராமன் வீட்டில் திருடிய நபா்களைப் பிடிக்க, பொன்னேரி, மீஞ்சூா், சோழவரம் காவல் நிலைய காவல் ஆய்வாளா்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவா்கள் பல்வேறு கோணங்களில் முதல்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com