ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணி பேரூராட்சியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திங்கள்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
சோழவரம் ஒன்றியத்தில் ஆரணியிலிருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் சிஎஸ்ஐ தூய பவுல் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பொங்கலை முன்னிட்டு, சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், போதகா் தேவகுமாா் தலைமையில் சபை ஊழியா் ராபா்ட், சபை மூப்பா் வெஸ்ஸி குருசேகா் மற்றும் ரேச்சல் சபை ஊழியா்கள் பங்கேற்றனா். மேலும், தமிழ் பாரம்பரியத்தைப் பின்பற்றும் விதமாக அனைவரும் வேட்டி, சேலையுடன் காணப்பட்டனா்.
பின்னா், பள்ளி மாணவா்கள் சிலம்பாட்டம் செய்து காண்பித்தனா்.