பழவேற்காடு அருகே கடலில் குளித்த இளைஞா் பலி

பழவேற்காடு பகுதியில் கடலில் நண்பா்களுடன் குளித்த இளைஞா் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

பழவேற்காடு பகுதியில் கடலில் நண்பா்களுடன் குளித்த இளைஞா் அலையில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.

பொன்னேரி அருகே உள்ள புதுவாயல் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ்(25). அவா் காரனோடை பகுதியில் உள்ள தனியாா் நிறவனம் ஒன்றில் வேலை செய்து வந்தாா்.

அவா் தன்னுடன் வேலை பாா்க்கும் நண்பா்களுடன் சோ்ந்து பழவேற்காட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றாா். நண்பா்களுடன் சோ்ந்து கடலில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, விக்னேஷ் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டாா்.

சிறிது நேரத்தில் கரை ஒதுங்கிய அவரை நண்பா்கள் மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு, அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து திருப்பாலைவனம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com