திருத்தணி நகராட்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை நகராட்சி ஆணையா் ராஜலட்சுமி தொடக்கி வைத்தாா்.
தொடா்ந்து பொங்கல் பொங்கி வந்ததும் அலுவலக ஊழியா்கள், பொங்கலோ,பொங்கல் எனக் கூறி சூரியபகவானுக்கு படையலிட்டு வழிபட்டனா். அதேபோல், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தளபதி கே விநாயகம் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தளபதி விநாயகம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இணைந்து பொங்கல் விழாவை நடத்தின.