ரயில் மோதி இருவா் பலி

கும்மிடிப்பூண்டி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இருவா் ரயில் மோதியதில் உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டி அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இருவா் ரயில் மோதியதில் உயிரிழந்தனா்.

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உணவகம் நடத்தி வருபவா் வெங்கடேசன். இவரிடம் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணணூரைச் சோ்ந்த கண்ணன் (38), செந்தில் (30) ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் இருவரும் உணவக வேலை முடித்து திங்கள்கிழமை இரவு ஆரம்பாக்கம் நொச்சிக்குப்பம் பகுதிக்குச் செல்ல ரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முயன்றனா். அப்போது சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலம் நோக்கிச் சென்ற ரயில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தியே உயிரிழந்தனா். விபத்து குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com