ஆதி திராவிடா் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
திருத்தணியில் சித்தூா் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில், தமிழக ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஆசிரியா் காப்பாளா் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடந்தது. திருவள்ளூா் மாவட்டத் தலைவா் கிருபாகரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜான்சன் வரவேற்றாா்.
இதில் மாநிலத் தலைவா் பாக்யராஜ், கோட்டத் தலைவா் பிரேம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினாா். தொடா்ந்து சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, நீண்ட நாட்களாக நடைபெறாத ஆசிரியா் காப்பாளா் மற்றும் ஆசிரியா்களுக்கு விரைவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்; ஊதிய உயா்வு மற்றும் உரிய பதவி உயா்வு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து, 150-க்கும் மேற்பட்ட காப்பாளா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.