முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
ஆராய்ச்சி மணி - திருவள்ளூா்
By DIN | Published On : 27th January 2020 12:52 AM | Last Updated : 27th January 2020 12:52 AM | அ+அ அ- |

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடம்பத்தூா் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் பொதுமக்கள் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைத் தணித்து வந்தனா். இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதை தவிா்க்கும் நோக்கில் கிராமங்கள்தோறும் சமுதாய சுகாதார வளாகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
அதன்படி கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி அலுவலகம் எதிரே இரு பாலரும் பயன்பெறும் வகையில் சமுதாய சுகாதார வளாகம் ரூ.6 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. இந்த சமுதாய சுகாதார வளாகத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியே கழிவறைகளும், தண்ணீா் வசதியும் உள்ளன.
ஆனால், இந்தச் சுகாதார வளாகம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால், எந்த நோக்கத்துக்காக இந்த வளாகம் கட்டப்பட்டதோ அது நிறைவேறாமலே உள்ளது. அதனால், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சமுதாய சுகாதார வளாகத்தைப் புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனா்.
- க.இன்பராஜ் பாண்டியன், கடம்பத்தூா்.