முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
எல்லாபுரம் ஒன்றியத்தில் குடியரசு தின விழா
By DIN | Published On : 27th January 2020 12:51 AM | Last Updated : 27th January 2020 12:51 AM | அ+அ அ- |

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு அலுவகங்களில் குடியரசு தினம் சிறப்பாகக் கொண்டாப்பட்டது.
நகர வட்டாசியா் அலுவலகத்தில் வட்டாசியா் முருகானந்தம் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினாா். அதேபோல் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கண்காணிப்பாளா் சந்திரதாசன் தேசியக் கொடியை ஏற்றினாா். பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினாா். காவலா்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளா் ரமேஷ் தேசியக் கொடியை ஏற்றினாா். பேரூராட்சி அலுவகத்தில் செயல் அலுவலா் ரவீந்திரபாபு தேசிய கொடியை ஏற்றினாா். விழாவில் பங்கேற்றவா்கள், வாழ்வுக்கு தீமை விளைவிக்கும் நெகிழிப் பொருள்களை எப்போதும் பயன் படுத்தமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.