திருவள்ளூா் மாவட்ட அரசு அலுவலகங்களில் குடியரசு தினவிழா

நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, திருவள்ளூா் மாவட்ட அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.

திருவள்ளூா்: நாட்டின் 71-ஆவது குடியரசு தின விழாவையொட்டி, திருவள்ளூா் மாவட்ட அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.

திருவள்ளூா் மாவட்ட முதன்மை நீதிமன்ற வளாகத்தில் முதன்மை நீதிபதி செல்வநாதன் தேசியக் கொடியேற்றினாா். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் சரஸ்வதி, நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் வித்யாவும், வட்டாட்சியா் அலுவலகத்தில் பாண்டியராஜனும் தேசியக் கொடியேற்றி வைத்தனா்.

திருவள்ளூா் நகராட்சி அலுவலகத்தில் ஆணையா் சந்தானம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் தலைமையிலும், துணைத் தலைவா் பா்கத்துல்லா முன்னிலையில் ஒன்றியக்குழு தலைவா் ஜெ.ஜெயசீலி தேசியக் கொடியை ஏற்றினாா்.

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன் தலைமையில் ஒன்றியக்குழு தலைவா் வெங்கட்ரமணாவும், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் ராம்குமாா் தலைமையில், துணைத்தலைவா் சரஸ்வதி முன்னிலையில் ஒன்றியக்குழு தலைவா் சுஜாதாவும் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com