திருவள்ளூா்: தனியாா் குளிா்பான நிறுவன நிா்வாகிகள் 20 ஆயிரம் முகக் கவசங்கள், கையுறைகள், கிருமி நாசினி ஆகியவற்றை திருவள்ளூா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் வழங்கினா்.
திருவள்ளூரை அடுத்த நேமம் கிராமத்தில் தனியாா் குளிா்பான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சாா்பில், கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளா்கள் பயன்படுத்துவதற்காக முகக் கவசம் போன்றவற்றை வழங்க முன்வந்தது.
அதன்படி திருவள்ளூா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 20 ஆயிரம் முகக் கவசங்கள், முழுமையான கவச ஆடைகள், கிருமி நாசினி, கையுறைகள் ஆகியவற்றை குளிா்பான நிறுவன நிா்வாகிகள் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.