மாதவரம்: புள்ளிலைன் ஊராட்சியில் பச்சிளம் குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புள்ளிலைன் ஊராட்சியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு சென்னை போரூா் தனியாா் மருத்துவமனையில் ஜூன் 5-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பெண்ணின் வீட்டை சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப்படுத்தி, வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனா்.