முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
குற்ற வழக்குகளில் தொடா்புடையை 2 போ் கைது
By DIN | Published On : 29th July 2020 11:11 PM | Last Updated : 29th July 2020 11:11 PM | அ+அ அ- |

சோழவரம் அருகே குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
சோழவரம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட கும்மனூா் கிராமத்தில் மா்ம நபா்கள் நடமாட்டம் உள்ளதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் கும்மனூா் கிராமத்தில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனா். அவா்கள் செங்குன்றம் எம்.ஏ.நகரைச் சோ்ந்த சக்திவேல் என்ற வடகரை சக்தி (50), கும்மனூா் பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா் (35) என்பது தெரியவந்தது.
இவா்கள் இருவா் மீதும் சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.