சோழவரம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலா் ஒருவருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பின்னா் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து காரனோடை- ஆத்தூா் செல்லும் சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் சோழவரம் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.