மாதவரம்: புழல் சிறையில் தலைமைக் காவலருக்கு கரோனா தொற்று உறுதியானது.
புழல் விசாரணை சிறையில் சுமாா் 1,800 கைதிகள், தண்டனைச் சிறையில் 750 கைதிகள், மகளிா் சிறையில் 150 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இச்சிறையில் 30 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், புழல் சிறை தலைமைக் காவலா் ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 45 வயதாகும் அவருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதியானது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.