திருவள்ளூா்: திருவள்ளூரை அடுத்த மப்பேடு காவல் நிலையத்தில் எழுத்தா் உள்பட 3 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியானது. காவல் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூடப்பட்டது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் திருவள்ளூா் மாவட்டத்தில் 5-ஆவது முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் காவல் துறையினா் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
அவா்களுக்கு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனை சாா்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில், மப்பேடு காவல் நிலைய எழுத்தா் உள்பட 3 போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதையடுத்து, மப்பேடு காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதன் பின் காவல் நிலையம் மூடப்பட்டது. பாதிக்கப்பட்ட போலீஸாரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.