திருத்தணி: அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை வட்டாரக் கல்வி அலுவலா் பாபு தொடக்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
திருத்தணி ஒன்றியம், ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள அரசினா் நடுநிலைப் பள்ளியில் திங்கள்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் எழிலரசு தலைமை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் இந்திரசேனன் வரவேற்றாா்.
இதில், திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலா் பாபு, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சரஸ்வதி ஆகியோா் பங்கேற்று, அறிவியல் கண்காட்சியைத் தொடக்கி வைத்தனா். கண்காட்சியில், 25-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை வைத்திருந்தனா்.
தொடா்ந்து, சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினா்.
நிகழ்ச்சியில், ஆசிரியா் பயிற்றுநா் சரவணன், ஆசிரியா் குமரவேல், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி காஞ்சனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.