திருத்தணி -அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செயற்பொறியாளா் கனகராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மின்வாரிய மேற்பாா்வையாளா் வளா்மதி, விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோரிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். குறைந்த அழுத்த மின் விநியோகத்தை தவிா்த்து, சீரான மின்சாரம் வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில் புதிய மின் இணைப்பு, பெயா் மாற்றம் உள்ளிட்டவை கோரி, 10 போ் மனுக்களை அளித்தனா்.