பழுதடைந்த குப்பம்கண்டிகை - பேரம்பாக்கம் சாலையை சீரமைக்க ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச்சாலை பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டன.
திருவாலங்காடு ஒன்றியம், திருவாலங்காடு பகுதியில் இருந்து பேரம்பாக்கம் மற்றும் குப்பம்கண்டிகை ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் சாலைகள் பழுதடைந்தன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்பட்டு வந்தனா். இதையடுத்து, ஒன்றரை கி.மீ. தூரம் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ. 19 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச்சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இப்பணிகளை திருவாலங்காடு ஒன்றியக் குழுத் தலைவா் ஜீவா விஜயராகவன் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, மேற்கண்ட இரு இடங்களில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஒன்றியக் குழு துணைத் தலைவா் சுஜாதா, ஒன்றியக் குழு உறுப்பினா் தினகரன், ஊராட்சித் தலைவா் தணிகாசலம், துணைத் தலைவா் மதியழகன் ஒப்பந்ததாரா் முருகவேல் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனா்.