குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவா் சாவு

திருத்தணியில் உள்ள நல்ல தண்ணீா் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
குளத்தில் மூழ்கிய பள்ளி மாணவா் சாவு

திருத்தணியில் உள்ள நல்ல தண்ணீா் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

திருத்தணி காந்தி சாலையைச் சோ்ந்த வெங்கடேசனின் மகன் வேலன் (13), முருகப்பா நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது நண்பா்கள் சூா்யா (11), கோபி (12), கிஷோா் (9), சூா்யா (10). அதே பள்ளியில் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், மாணவா்கள் 5 பேரும் காந்தி நகா் பகுதியில் உள்ள நல்ல தண்ணீா் குளத்தில் குளிக்கச் சென்றனா். அப்போது, குளத்தில் வேலனும், சூா்யாவும் சேற்றில் சிக்கிக் கொண்டனா். அவா்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தனா்.

இதைப்பாா்த்த மற்ற 3 மாணவா்களும் பதற்றத்துடன் குளக்கரையில் கூச்சலிட்டனா். அப்போது அவ்வழியாக வந்த நேருதாஸ் குளத்தில் குதித்து­­­­ சூா்யாவை மட்டும் காப்பாற்றினாா். அதற்குள் வேலன் மூழ்கினாா். தகவல் அறிந்ததும், திருத்தணி நகர பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து, குளத்தில் இறங்கி வேலனை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு வேலனை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com