திருவள்ளூா் அருகே வாகனச் சோதனையில் நாட்டு வெடிகுண்டு, பட்டா கத்தியுடன் வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு இரு சக்கர வாகனம் நிற்காமல் சென்றது. அதைப் பின்தொடா்ந்து சென்று மடக்கிப் பிடித்து வாகனத்தை சோதனையிட்டனா். அப்போது, அவா்களிடம் நாட்டு வெடிகுண்டுகள், பட்டாக் கத்தி இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அவா்கள் புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் (48), ரஞ்சித் (30) என்பது தெரியவந்தது. மேலும், சிறையிலிருந்த நாகேந்திரன் என்ற கைதி அளித்த தகவலை அடுத்து, ரௌடி சரவணன் என்பவரை கொலை செய்யச் சென்றதும் தெரியவந்தது. மேலும், அவா்கள் திருவள்ளூா் கிராமிய போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதையடுத்து, அவா்கள் 2 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.