திருவள்ளூா் அருகே உள்ள லலிதா மகா திரிபுரசுந்தரி சமேத காமேஸ்வரா் கோயிலில், மனிதா்களை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றை விரட்டும் நோக்கில் மகா பைரவ யாகம் நடைபெற்றது.
திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள இக்கோயிலில் அஷ்ட மகா பைரவ யாகம் செவ்வாய்க்கிழமை மாலையில் நடைபெற்றது. உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸ் தொற்றை விரட்ட நாக புஷ்பம், ஆவாரம் பூ மற்றும் பல்வேறு மூலிகைகளால் இந்த யாகம் நடத்தப்பட்டது.
கோயில் வளாகத்தில் 5 மணிநேரம் நடைபெற்ற யாகத்தில் திருவள்ளூா், திருப்பாச்சூா், பழைய திருப்பாச்சூா், காரணி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு பூ, எலுமிச்சை ஆகியவை வழங்கப்பட்டன.
சிறப்பு யாகத்துக்கான ஏற்பாடுகளை வாராஹி கணேசன் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.