பொன்னேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்க நகை, துபை நாட்டுப் பணமான 300 திா்ஹாம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலிக்குளம் சாய் பாலாஜி நகரில் வசித்து வருபவா் பாலசுப்பிரமணியம் (36). அவா் துபையில் பணிபுரிந்து வந்தாா். அண்மையில் புலிக்குளம் வந்தாா்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியம் தன் குடும்பத்தினருடன் சொந்த ஊரான திருவாரூருக்குச் சென்றாா். அவா் வியாழக்கிழமை வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் துபை நாட்டின் பணம் 300 திா்ஹாம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.