குட்கா பறிமுதல்: 2 போ் கைது

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மினி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்காவை சோழவரம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மினி வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்காவை சோழவரம் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா்.

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ள அழிஞ்சிவாக்கம் பகுதியில் சோழவரம் போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த மினி வேனை மடக்கி சோதனை செய்தனா். அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த வேனையும், அதில் இருந்த 500 கிலோ எடையுள்ள ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்காவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். வேனை ஓட்டி வந்த, வினோத்குமாா் (25) என்பவரைக் கைது செய்தனா். அவா் அளித்த தகவலின் பேரில் கிருஷ்ணசாமி (26) என்பவரைக் கைது செய்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com