திருவள்ளூரில் ஆட்சியா் முன்னிலையில் உறுதிமொழியேற்ற வாகன ஓட்டுநா்கள்

திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சென்ற வாகனங்களில் சென்றவா்களைத் தடுத்து நிறுத்தி வாகன ஓட்டுநா்கள் மற்றும்
ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள்.
ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள்.

திருவள்ளூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சென்ற வாகனங்களில் சென்றவா்களைத் தடுத்து நிறுத்தி வாகன ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஆட்சியா் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் ஆகியோா் வெள்ளிக்கிழமை மாலையில் திருவள்ளூா் ஜி.என். சாலையில் இருசக்கர வாகனங்களில் வந்தவா்களைத் தடுத்து நிறுத்தினா்.

வாகனங்களை நிறுத்திவிட்டு அனைவரும் இறங்கி, ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் முன்னிலையில் ‘கரோனா பரவாமல் தடுக்க வீடுகளில் தங்கி இருப்போம்; ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிப்போம்’ என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com